இப்படி ஒரு ஒபீடியன்ட்டான ஒரு ஆளை எங்காச்சும் பார்த்திருக்கீங்களா.. சொன்னதும் என்னா வேகம் பாருங்க!
டெல்லி: எஜமான் சொல் பேச்சு கேட்டு மக்களுக்கு பிரயோஜனமான வேலையை செய்யும் இந்த நாய்க்கு பாராட்டுகள் குவிகின்றன.
வீட்டு விலங்குகளான நாய், கிளி, பூனை, பறவைகள், முயல்கள், மீன்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வீடுகளில் வளர்த்து வருவதை நாம் பார்க்கிறோம். இதில் குறிப்பாக நாய்களுக்கு அவர்களது உரிமையாளர்கள் சில பயிற்சிகளை அளிப்பதால் அவை உரிமையாளர் கூறும் கட்டளையை ஏற்று நடக்கும்.
நாய்களுக்கு பந்துகளை கொண்டு வந்து கொடுப்பது, குழி தோண்ட வைப்பது, மோப்ப சக்தியை அதிகரிப்பது, குறிப்பிட்ட பொருளை தாண்டுவது, சொல்லும் கட்டளையை கேட்டு நடப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
ப்பா.. நம்ம நயனா இது? பிரபாஸ் மேல ஏறி.. வெறித்தனம்.. வைரலாகும் 'அந்த' காட்சிகள்.. ஷாக்கில் ஃபேன்ஸ்!
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நாயின் உரிமையாளர், நாயிடம் குழி தோண்டுமாறு கட்டளையிடுகிறார். உடன் அந்த நாய் குழி தோண்டுகிறது. அவர் போதும் என சைகை காட்டியவுடன் நிறுத்திவிடுகிறது. அந்த பள்ளத்தில் செடியை நடுகிறார்.
that's the most enthusiastic helper i've ever seen
— Humor And Animals (@humorandanimals) May 19, 2020
(redditor : u/georgeyk17) pic.twitter.com/bYKF2Is1qf
இவ்வாறாக கையில் உள்ள சின்னச்சின்ன செடிகளை நடுவதற்கு நாய் குழித் தோண்டுகிறது. எஜமான் பேச்சை கேட்டு அப்படியே செய்யும் சமர்த்து குட்டிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.