6ஆவது மாடியிலிருந்து தற்கொலை முயற்சி.. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவரின் பகீர் முடிவு.. வீடியோ
டெல்லி: டெல்லியில் தவ்லீஜீ ஜமாத் அமைப்பின் வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 6 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் முதல் வாரத்தில் நடந்த தவ்லீஜீ ஜமாத்தின் மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வடகிழக்கு டெல்லியின் தில்ஷாத் கார்டனில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இவர் மருத்துவமனையின் 6ஆவது மாடியின் ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் மருத்துவர்கள் அவ்வழியாக வந்ததை அடுத்து அவரை காப்பாற்றினர். அவருக்கு உளவியல் துறை நிபுணர்களின் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மருத்துவமனையின் 6ஆவது மாடியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் இது போல் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
#WATCH A person related to Markaz Nizamuddin, admitted at Rajiv Gandhi Super Speciality Hospital, Delhi attempted to commit suicide today. He was saved by the hospital authorities. pic.twitter.com/qHSGIYaTJn
— ANI (@ANI) April 1, 2020
அவரை எப்படியோ காப்பாற்றிவிட்டோம். இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க நாங்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம். கொரோனா நோயாளிகளுக்கு காற்றோட்டம் மிக அவசியம் என்பதால் அந்த ஜன்னலை மூடவில்லை என தெரிவித்தனர்.