இப்படி ஒரு மாமியார் கிடைக்க.. இந்த மருமக எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்.. வெட்கத்தைப் பாருங்களேன்!
டெல்லி: ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட பதற்றத்தால் மாமியார் ஒருவர் தனது மருமகளின் காலில் விழும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். இப்போது மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என சொல்லும் அளவுக்கு வீடு தோறும் குடும்ப சண்டைகள் அதிகரித்துள்ளன.
பெற்ற தாய், கட்டிய மனைவியிடம் மாப்பிள்ளை படும்பாட்டை சொல்லி மாளாது. அதற்காக இப்போதுள்ள சில பெண்கள் மாமியார், மாமனார் இல்லாத வரன்களையே அதிகம் விரும்புகின்றனர்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை எல்லாம் மெல்ல மெல்ல மங்கி வருகிறது. இந்த நிலையில் திருமண சடங்கின்போது மாமியார் ஒருவர் மருமகளின் காலில் விழுந்து வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தொட்டிலில் தூக்கம்.. டயாபர் அணியும் பழக்கம்.. குழந்தை போல் செயல்படும் 25 வயது இளம்பெண்!
திருமணம் என்றாலே பதற்றம், குழப்பம் எல்லாம் இருக்கும். அதன்படி திருமண விழாவில் புரோகிதர் ஒருவர் வெற்றிலைப் பாக்கை மணமகளிடம் கொடுக்கிறார். அதை அந்த மணமகள், மாமியாரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் கொடுத்த போது மாமியார் அந்த பெண்ணின் கைகளை வணங்கி பின்னர் பதற்றம் காரணமாக அவரது காலில் விழுந்து விடுகிறார்.
Due to marriage tension and confusion, mother-in-law gets the blessings of daughter-in-law by touching her feet. And both of them are terribly embarrassed! Watch this video! 😃😛😂 #marriage #Embarrassment #humour pic.twitter.com/ZTg8G89Mg9
— Ananth Rupanagudi (@rananth) February 29, 2020
இதில் இருவரும் வெட்கத்தில் சிரிக்கிறார்கள். எல்லாம் குழப்பத்தில் நடந்த விஷயத்தால் இருவரும் சங்கடப்படுகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.