டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி ஒரு மாமியார் கிடைக்க.. இந்த மருமக எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்.. வெட்கத்தைப் பாருங்களேன்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட பதற்றத்தால் மாமியார் ஒருவர் தனது மருமகளின் காலில் விழும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். இப்போது மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என சொல்லும் அளவுக்கு வீடு தோறும் குடும்ப சண்டைகள் அதிகரித்துள்ளன.

Video shows what happen when we are in a confusion state during marriage

பெற்ற தாய், கட்டிய மனைவியிடம் மாப்பிள்ளை படும்பாட்டை சொல்லி மாளாது. அதற்காக இப்போதுள்ள சில பெண்கள் மாமியார், மாமனார் இல்லாத வரன்களையே அதிகம் விரும்புகின்றனர்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை எல்லாம் மெல்ல மெல்ல மங்கி வருகிறது. இந்த நிலையில் திருமண சடங்கின்போது மாமியார் ஒருவர் மருமகளின் காலில் விழுந்து வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தொட்டிலில் தூக்கம்.. டயாபர் அணியும் பழக்கம்.. குழந்தை போல் செயல்படும் 25 வயது இளம்பெண்!தொட்டிலில் தூக்கம்.. டயாபர் அணியும் பழக்கம்.. குழந்தை போல் செயல்படும் 25 வயது இளம்பெண்!

திருமணம் என்றாலே பதற்றம், குழப்பம் எல்லாம் இருக்கும். அதன்படி திருமண விழாவில் புரோகிதர் ஒருவர் வெற்றிலைப் பாக்கை மணமகளிடம் கொடுக்கிறார். அதை அந்த மணமகள், மாமியாரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் கொடுத்த போது மாமியார் அந்த பெண்ணின் கைகளை வணங்கி பின்னர் பதற்றம் காரணமாக அவரது காலில் விழுந்து விடுகிறார்.

இதில் இருவரும் வெட்கத்தில் சிரிக்கிறார்கள். எல்லாம் குழப்பத்தில் நடந்த விஷயத்தால் இருவரும் சங்கடப்படுகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

English summary
A video shows due to confusion, mother in law touches daughter in law's feet by mistake in a marriage ritual.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X