டெல்லியில் வன்முறைகள் தூண்டப்படுகிறதா? தன்னிச்சையானதா? ப.சிதம்பரம் கேள்வி
டெல்லி: கிழக்கு டெல்லியில் வன்முறைகள் தூண்டப்படுகின்றனவா? அல்லது தன்னிச்சையாக நடைபெறுகின்றனவா? என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் கோர வன்முறை சம்பவங்களில் 18 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டனவா? தன்னிச்சையாக நடைபெறுகின்றனவா? இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மத்திய அரசின் கடமை.
Whether the violence in East Delhi was instigated (MOS-Home) or spontaneous (MHA), the government has a duty to end the violence.
— P. Chidambaram (@PChidambaram_IN) February 26, 2020
இன்று வரை இந்த வன்முறைகள் நீடித்து கொண்டிருக்கின்றன. இது டெல்லி போலீசாரின் தோல்வியையே காட்டுகிறது. டெல்லி உயர்நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடத்தி அவசர சிகிச்சைகள் வழங்க உத்தரவிடுகிறது எனில் டெல்லி போலீசாரின் செயல்பாடுகள் பற்றி என்ன சொல்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி.. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு.. அனுமார் கொடி ஏற்றம்.. அதிர்ச்சி வீடியோ.. என்ன நடந்தது?