வாயில் நீளமான குச்சி... இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு எல்லோருக்கும் இருந்தா கொரோனாலாம் ஓடிடும்
சமூக இடைவெளிக்காக வாயில் குச்சியுடன் பார்க்கில் நடந்து செல்லும் நாய்க்குட்டியின் வீடியோ வைரலாகியுள்ளது.
டெல்லி: சமூக இடைவெளிக்காக வாயில் குச்சியுடன் பார்க்கில் நடந்து செல்லும் நாய்க்குட்டியின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
Recommended Video
கொரோனா காலத்தில் முகக்கவசமும், சமூக இடைவெளியும் அதிமுக்கியமாகிவிட்டது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள அனைவரும் இதனை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்த விதி மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் என நிரூபித்திருக்கிறது நாய்க்குட்டி ஒன்று.
வெல்கம் டு நேச்சர் என்ற பெயரில் இயங்கும் நெட்டிசன் ஒருவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், வாயில் ஒரு நீளமான குச்சியை கவ்விக்கொண்டு, நாய்க்குட்டி ஒன்று பார்க்கில் நடந்து செல்கிறது. மக்கள் அனைவரும் கூட்டமாக நின்றிருக்க, நாய் வாயில் உள்ள குச்சி அவர்களை தன்னிடம் நெருங்கவிடாமல் தற்காக்கிறது.
"இந்த நாய்க்குட்டி சமூக இடைவெளியை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுவிட்டது போலும்", என குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் அந்த நெட்டிசன். இதைப்பார்த்த மற்ற நெட்டிசன்கள் அந்த நாய்க்குட்டியின் செயலை பாராட்டி வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதைப் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் மக்களிடையே கூட இல்லாத போதிய விழிப்புணர்வு, இந்த நாய்க்குட்டியிடம் இருக்கிறதே என இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் வியந்து வருகின்றனர்.