மே12-ம் தேதி வாக்களிக்க ரெடி.. நீங்க? வாக்காளர் அட்டையை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த விராட் கோலி
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் வரும் மே 12ம் தேதி குருகிராமில் ஓட்டுப்போட உள்ளதாக குறிப்பிட்டு, வாக்காளர் அடையாள அட்டையை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து பின்னர் நீக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
வரும் மே 12ம் தேதி, ஹரியானா டெல்லி, பீகார், மேற்கு வங்கம். ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி, ஹரியானாவின் குருகிராமில் வரும் மே 12ம் தேதி வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது வாக்காளர் அடையாள அட்டையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த அவர், அதில் தான் வரும் மே 12ம் தேதி வாக்களிக்கப் போவதாகவும், நீங்களும் தயாரா என்று மக்களிடம் கேட்டு இருந்தார். இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை பகிரங்கமாக விராட் கோலி ஷேர் செய்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கேள்விகள் கேட்டனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில நிமிடங்களில் வாக்காளர் அடையாள அட்டைடையை அவர் நீக்கிவிட்டார்
இலங்கை குண்டுவெடிப்பு.. கேரளாவை சேர்ந்த இரண்டு பேரிடம் விசாரணை.. என்ஐஏ கிடுக்குப்பிடி!
ஹைதராபாத்தில் மே12ம் தேதி ஐபிஎல் இறுதி போட்டி நடக்க உள்ளது. அன்றைக்கு நான் விராட் கோலி வாக்களிக்க செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.