காலத்தை வென்ற கூட்டணி… திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ராகுல் பளிச் பதில்
திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் சோனியா காந்தி பங்கேற்று கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
அன்று மாலை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் சோனியா கலந்து கொண்டு பேசுகிறார். அதற்கான விழா அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது வீட்டுக்கு நேரில் சென்ற ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதை சோனியா காந்தியும் ஏற்றுக் கொண்டார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் டெல்லி வந்து சோனியாஜியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என பதிவிட்டுள்ளார்.