2 உலகப் போரிலிருந்து மீண்டு வந்தோம்.. பாடம் கற்க வேண்டும்.. ப்ளூம்பெர்க் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
டெல்லி: இரண்டு உலகப் போர்களுக்கு பின் மக்கள் வேகமாக செயல்பட்டது போல கொரோனா பாதிப்பிற்கு பின்பும் மக்கள் வேகமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று இணையவழி மாநாடு நடத்தப்பட்டது.இணைய வழி நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதை தொடர்ந்து ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி இணைய வழி உரை நிகழ்த்தினார். வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
கடைசி சில நாட்கள்.. சீனாவிற்கு பெரிய இடி கொடுக்க போகும் டிரம்ப்.. பிடன் நினைத்தாலும் தடுக்க முடியாது
மோடி
இதில் பேசிய மோடி, கொரோனாவிற்கு பின் வாழ்க்கை முறை மாறிவிட்டது மக்கள் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள், கல்விமுறை இனி இதேபோல் இருக்காது. இனி உலகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதே நம் முன் இருக்கும் கேள்வி. உலகத்தின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க வேண்டும்.
என்ன சொன்னார்
மக்கள் தங்கள் மனநிலை, செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இரண்டு உலகப் போர்களுக்கு பின் மக்கள் செயல்பட்டது போல இனி செயல்பட வேண்டும். இரண்டு உலக போர்களுக்கு பின் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதேபோன்ற மாற்றங்களை ஏற்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கொரோனா
கொரோனா காரணமாக பல்வேறு துறைகளில் விதிமுறைகள் மாறி உள்ளது. எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், நாம் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது நிலவும் வாய்ப்பை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லாக்டவுன் காலத்தில் பல நகரங்களில் தூய்மை பணிகள் நடந்துள்ளது.
சுத்தம் செய்தனர்
சாலைகள், ஏரிகள், குளங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை சுத்தம் அடைந்துள்ளது, மாசு குறைந்துள்ளது. கிராமங்கள் போன்ற தூய்மையான காற்று மற்றும் இயற்கையுடன் நாம் நகரங்களை கட்டமைக்க வேண்டும், கிராமங்களையும் முன்னேற்ற வேண்டும், என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.