டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உர்ஜித் படேலை மிஸ் பண்ணப் போறோம்.. பிரதமர் மோடி டிவீட்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் இந்திய வங்கித் துறையை சீரமைத்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய அரசின் நெருக்கடியால் உர்ஜித் படேல் பதவி விலகியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில் பிரதமரின் புகழாரம் வந்து சேர்ந்துள்ளது. இதுதொடர்பாக 2 டிவீட் போட்டுள்ளார் பிரதமர் மோடி.

We will miss you Dr Urjit Patel, says PM Modi

முதல் டிவீட்

டாக்டர் உர்ஜித் படேல் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர். பொருளாதாரப் பிரச்சினைகளை மிக நுனுக்கமாக கையாண்டு தீர்வு காணக் கூடியவர். பெரும் குழப்பத்தில் இருந்த வங்கித் துறையை சீரமைத்து ஒழுங்குபடுத்தியவர் உர்ஜித் படேல். அவரது தலைமையின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மையுடன் திகழ்ந்தது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

2வது டிவீட்

டாக்டர் உர்ஜித் படேல் மிகத் திறமையான நிர்வாகி ஆவார். 6 வருடமாக துணை ஆளுநராகவும், பின்னர் ஆளுநராகவும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்திருந்தார். மிகப் பெரிய பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரை நாம் அனைவரும் நிச்சயம் மிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார் பிரதமர்.

English summary
PM Narendra Modi has said that, Dr. Urjit Patel is a thorough professional with impeccable integrity. He has been in the Reserve Bank of India for about 6 years as Deputy Governor and Governor. He leaves behind a great legacy. We will miss him immensely in a Tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X