தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவிக்க இந்தி திரைப்படங்களை பார்க்க வேண்டும்... கனிமொழி
டெல்லி: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடியதால் தாக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர்களை ஆதரித்த நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் நடித்த இந்தி படங்களை பார்க்க வைக்கின்றனர் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யூ. மாணவர்களுக்கு தீபிகா படுகோன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து அவர் நடித்த திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக #BoycottDeepika ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகின்றன. தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் திரைப்படம் வெளியாக உள்ளது.
நாலாபுறமும் போராட்டங்கள்.. தொடர் பதட்டத்தில் அஸ்ஸாம்.. கவுகாத்தி விழாவை ரத்து செய்தார் மோடி!
இந்நிலையில் தீபிகா படுகோனுக்கு ஆதரவான குரல்களும் வலுத்து வருகின்றன. டெல்லியில் இன்று பாதிக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர்களை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.
Today participated in All India General Strike in front of Jamia Millia islamia university against the violence in Jamia Millia and against CAA-NRC/NPR pic.twitter.com/RInvEXvYIZ
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 8, 2020
அப்போது தீபிகா படுகோன் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கனிமொழி, பெரும்பாலும் இந்தி திரைப்படங்களை பார்ப்பது இல்லை. இப்போது தீபிகா படுகோனை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக இந்தி திரைப்படங்களை பார்க்க வைக்கின்றனர் என்றார்.