அமைதி பேச்சுகளை இந்தியா முன்னெடுத்தால் வரவேற்போம்.. ஈரான் தூதர் அலி செகேனி
Recommended Video
மூன்றாம் உலக போர் ஏற்படும் அளவுக்கு முக்கியமானவர் ... யார் இந்த சுலைமானி ?
டெல்லி: அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுகளை இந்தியா முன்னெடுத்தால் வரவேற்போம் என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி கூறியுள்ளார்.
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ராணுவ ஜெனரல் சுலைமானிக்கு டெல்லியில் ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது அலி செகேனி கூறியதாவது:
அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் இந்தியாவின் பங்கு மிகச் சிறப்பனது. பதற்றங்களை விரும்பாத அனைத்து நாடுகளும் முன்னெடுக்கும் அமைதி முயற்சிகளை வரவேற்கிறோம்.
ஈரானின் நல்ல நட்பு நாடு இந்தியா. இந்தியா, அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டால் வரவேற்போம்.
ஏவுகணை தாக்குதல்கள்.... அமெரிக்காவின் முகத்தில் அறைந்திருக்கிறோம்.... அயதுல்லா கொமேனி
ஈரானைப் பொறுத்தவரையில் யுத்தத்தை விரும்பவில்லை. இந்தியாவின் எந்த ஒரு சமாதான நடவடிக்கையை ஈரான் வரவேற்கும்.
இவ்வாறு அலி செகேனி தெரிவித்தார்.
Comments
English summary
Iranian Envoy to India Ali Chegeni said that they will welcome the India's Peace initiative.
Story first published: Wednesday, January 8, 2020, 15:33 [IST]