ஏன் பயப்படுகிறார்? எதை மறைக்கிறார்? மமதா பானர்ஜிக்கு மத்திய அமைச்சர் அடுக்கடுக்காக கேள்வி
Recommended Video
டெல்லி: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில், யாரை காப்பாற்றுகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி? என்று, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜவடேக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக, மமதா பானர்ஜிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளன. யார் இவர்கள்? சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தவர்கள்தான் இப்படி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
இது மெகா கூட்டணி கிடையாது. பல்வேறு கொள்கைகளால் வேறு பட்டிருந்தாலும் இவர்கள் அனைவருமே, ஊழல் என்ற ஒரே விஷயத்திற்காக ஒருங்கிணைத்துள்ளனர். ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்கள்.
கொல்கத்தா போலீஸ் கமிஷனரை எதற்காக மமதா பானர்ஜி பாதுகாக்கிறார்? எதற்காக மமதா பானர்ஜி விசாரணையிலிருந்து தப்பியோடுகிறார்? எதை அவர் மறைக்க பார்க்கிறார்? இதற்கு முன்பாக எம்பி, எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டபோது மமதா இவ்வாறு தர்ணா நடத்தவில்லை. இப்போது போலீஸ் அதிகாரிகளும் மப்டி உடையில், சிபிஐக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் பின்னணி என்ன? இவ்வாறு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் பிரகாஷ் ஜவடேக்கர்.