டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன எல்லையில் மாயமான விமானத்தில் விமானி.. கட்டுப்பாட்டு அறையில் மனைவி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Google Oneindia Tamil News

Recommended Video

    13 பேருடன் காணாமல் போன இந்திய விமானம்...விமானத்திற்காக காத்திருக்கும் உறவினர்கள்!- வீடியோ

    டெல்லி: சீன எல்லை அருகே விமானம் மாயமானபோது விமான கட்டுப்பாட்டு அறையில் விமானியின் மனைவி பணியாற்றியது நெஞ்சை உருக்கும் விதமாக உள்ளது.

    இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து கடந்த திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    அப்போது மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் உள்ள சீன எல்லை அருகே தரையிறங்க இருந்த நிலையில் திங்கள்கிழமை அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. 3 நாட்களாக அந்த விமானத்தை காணவில்லை. இந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய் 30, சி-130 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    யார் பயணம்

    யார் பயணம்

    காணாமல் போன விமானத்தில் யார் யார் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த லெப்டினன்ட் மோகித் கார்க் (27) அந்த விமானத்தில் பயணம் செய்திருந்தது தெரியவந்துள்ளது. விமானம் மாயமான தகவல் அறிந்த மோகித்தின் தந்தை சுரீந்தர் கார்க் அசாமுக்கு விரைந்துள்ளார்.

    விமானி

    விமானி

    இந்த விமானத்தில் சென்று மாயமானவர்களில் ஹரியானாவை சேர்ந்த ஆசிஷ் தன்வார் (29) என்ற விமானியும் பயணித்துள்ளார். ஜோர்கத்திலிருந்து விமானம் புறப்பட்டபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் அவர் மனைவி பணியாற்றிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

    ஜோர்கத்

    ஜோர்கத்

    இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் ஆசிஷ் தன்வாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. சந்தியாவும் விமான படையில் பணியாற்றுகிறார். அந்த விமானம் ஜோர்கத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் சந்தியா இருந்தார்.

    விமானம்

    விமானம்

    அவர்தான் எங்களுக்கு தகவல் சொன்னார். முதலில் சீன எல்லையில் எங்காவது அவசரமாக தரையிறங்கியிருக்கும் என நினைத்தோம். ஆனால் அது மலையில் எங்காவது மோதி விபத்தில் சிக்கியிருக்கும் என்ற தகவல் எங்களுக்கு பேரிடியை கொடுக்கிறது. இந்த தகவல் அறிந்த ஆசிஷின் தந்தை அசாம் சென்றுள்ளார். விமானம் காணாமல் போன போது மனைவியே கட்டுப்பாட்டு அறையில் இருந்த சம்பவம் கேட்போர் மனதை உலுக்குகிறது.

    English summary
    When the IAF AN32 aircraft missing, Sandhya wife of Pilot Ashish Tanwar was on Air Traffic Control room.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X