செங்கோட்டையில் நாளை தேசியக் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றுகிறார் மோடி
டெல்லி: இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி, ஆகஸ்ட் 15ம் தேதியான நாளை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
Recommended Video
பிரதமர் மோடியின் உரை மற்றும் விழா தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால், இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அளவு குறைக்கப்படும்.
செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், காலை 7.30 மணிக்கு, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ராம்நாத் கோவிந்தின் உரை ஆகஸ்ட் 14 ஆம் தேதி, அதாவது இன்று இரவு 7.00 மணிக்கு தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி (ஏ.ஐ.ஆர்) வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.
கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு தமிழகம் வெற்றிநடை போடும் - முதல்வர் சுதந்திர தின வாழ்த்து
முதலில் தனது உரையை இந்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் குடியரசு தலைவர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது