சீன அதிபருடனான முறைசாரா சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்? வெளியுறவுத்துறை விளக்கம்
Recommended Video
டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான முறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று, வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே, இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த இரு நாட்களாக நடைபெற்ற இந்த முறைசாரா உச்சி மாநாட்டிற்கு, மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீன அதிபர் என்று, சில உள்நாட்டு, ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் விஜய் கோகலே அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர் இது தொடர்பாக கூறியதாவது: இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் நடுவேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடுவே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த உச்சிமாநாட்டில் இன்றைய தினம் 90 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். இரு நாட்களும் சேர்த்து இருவரும் 6 மணிநேரம் உரையாடி கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
டோன்ட் கோ பேக் மோடி.. புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக.. தேசிய அளவில் டிரெண்ட்.. பதிலுக்கு பதில்!
இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. மேலும், மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடி தான் இவ்வாறு அவர் தெரிவித்தார்.