கும்மிருட்டு... கேட்கும் குண்டு சத்தம்.. வீடியோவை பகிர்ந்து செந்தில் குமார் எம்பி ஆவேசம்
Recommended Video
டெல்லி: டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுகவைச் சேர்ந்த தருமபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை சட்டம் கொண்டுவந்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் அமைப்பு மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் ஆகியவை தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் நேற்று போராட்டம் நடத்தினர்.
பின்னர் இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது.போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் அந்த இடமே போர்களமாக மாறியது.
மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
#Highly_atrocious.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 15, 2019
This is clear #misuse_of_firearms by the police.
Who has given the order for use of firearms.#Shame BJP .
You and your #Brutality#BJPburningDelhi
pic.twitter.com/fe7WUHsN1v
திமுகவைச் சேர்ந்த தருமபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள செந்தில் குமார் எம்பி, டெல்லி போலீசார் கண்ணீர் புகை குண்டு தாக்குதலை வேண்டுமென்றே நடத்தி இருப்பதாக கண்டித்துள்ளார். யார் இவர்களுக்கு அந்த உத்தரவு கொடுத்தது என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார். பாஜக செய்வது வெட்கக்கேடு என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.