அருண் ஜேட்லியா? அமித்ஷாவா? சு.சுவாமி குறிப்பிடும் சகுனி யார்?
டெல்லி: பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் சகுனி என குறிப்பிட்டிருப்பது மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியையா? அல்லது பாஜக தலைவர் அமித்ஷாவையா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.
சுப்பிரமணியன் சுவாமி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி மீண்டும் பதவி ஏற்பார்.. சகுனி இல்லாமல்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோரை குறிக்கும் புனைபெயர்களை பட்டியலிட்டு அனைவரையும் திஹார் சிறைக்கு அனுப்புவதற்கான சூழ்நிலையும் எளிதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மோடி அமைச்சரவையில் தமக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்தவர் சுப்பிரமணியன் சுவாமி. அதனாலேயே நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
தற்போது சகுனி இல்லாமல் மோடி பிரதமராக மீண்டும் பதவி ஏற்பார் என குறிப்பிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. அவர் குறிப்பிடுவத் அருண்ஜேட்லியைத்தான் என்கிறது ஒரு தரப்பு.
I am sure Namo in his second term minus Shakuni will help to create the obstruction-free environment for me to send TDK,Bambino, Munim, Oscar, Suman, and Sam Pits plus PC BC MC plus GST to Tihar jail. Need more?
— Subramanian Swamy (@Swamy39) May 21, 2019
அருண்ஜேட்லியாகவும் இருக்கலாம் அல்லது பாஜக தலைவர் அமித்ஷாவாகவும் இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.