இந்த வழக்குக்கு 98 நாட்கள் திகார் சிறையா.. ப.சிதம்பரத்தை சந்தித்த சசிதரூர் கேள்வி
டெல்லி: டெல்லியில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை 27-ஆம் தேதி வரை திகார் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் திகார் சிறைக்கு சென்று ப சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.
அவருடன் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி ஆகியோர் உடனிருந்தனர். ப சிதம்பரத்துடனான சந்திப்புக்கு பின்னர் சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எடுங்கள், மக்கள் மீது வீசி கொல்லுங்கள்.. உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
அப்போது அவர் கூறுகையில் 98 நாட்கள் ப சிதம்பரத்துக்கு சிறை வாசம் எதற்கு? இந்த வழக்கு ஒன்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினை அல்ல. அரசியலமைப்பின் அடிப்படை கடமை மீறப்படுகிறது. அவருடன் நாங்கள் இருக்கிறோம். ஒற்றுமையை காட்டவே நாங்கள் வந்தோம் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மூத்த தலைவர்களும் சந்தித்தனர்.