சாமி எனக்கொரு சந்தேகம்.. சர்வாதிகாரிகள் பெயர்கள் ஏன் அந்த எழுத்தில ஆரம்பிக்குது? கேட்கிறார் ராகுல்
உலகத்தில் உள்ள சர்வாதிகாரிகளின் பெயர்கள் எல்லாம் எம் என்ற எழுத்தில் ஏன் தொடங்குகிறது என்று கேள்வி கேட்டுள்ளார். ராகுல்காந்தி.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது உலகத்தில் உள்ள சர்வாதிகாரிகளின் பெயர்கள் எல்லாம் எம் என்ற எழுத்தில் ஏன் தொடங்குகிறது என்பதுதான். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மார்கோஸ், முசோலினி, மிலோஸ்விக், மோபுட்டோ, முஷாரப், மிகோம்பிரோ என பல சர்வாதிகாரிகளின் பெயர்களை பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடியையும், மத்திய பாஜக அரசையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். விவசாயிகள் போராட்டம், சீனா ஊடுருவல், இந்திய பொருளாதாரம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். நேற்று முன்தினம் ஒரு டிவிட்டில், சீனா என்ற பெயரை சொல்லவே பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று கிண்டல் அடித்திருந்தார்.
சாமி எனக்கொரு சந்தேகம்.. சர்வாதிகாரிகள் பெயர்கள் ஏன் அந்த எழுத்தில ஆரம்பிக்குது? கேட்கிறார் ராகுல்
Why do so many dictators have names that begin with M ?
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2021
Marcos
Mussolini
Milošević
Mubarak
Mobutu
Musharraf
Micombero
இப்போது சர்வாதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டு பிரதமர் மோடியை மறைமுகமாக சர்வாதிகாரி என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.