உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா -10 கோடியே 39 லட்சம் பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,39,05,789 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 7,56,72,578 பேர் மீண்டுள்ளனர்.
டெல்லி: உலகம் முழுவதும் ஒரே நாளில் 3,78,344 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,39,05,789 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 7,56,72,578 பேர் குணமடைந்தனர். உலகம் முழுவதும் 2,59,86,457 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 8,969 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்தனர். கடந்த ஓராண்டில் கொரோனாவிற்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,46,754 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 1,14,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,68,99,755 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,738 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,54,047 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் ஒரே நாளில் 25,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 92,30,016 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவிற்கு 609 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,25,143 பேராக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 8,077,967 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9,26,906 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் கொரோனா தொற்று ஆளானவர்கள் எண்ணிக்கை 38,68,087 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் 17,648 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 437 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் கடந்த ஓராண்டில் 73,619 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். 33,18,173 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
பிரிட்டன் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. அங்கு ஒரே நாளில் பிரிட்டனில் 18,607 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் 38,35,783 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 406 பேர் ஒரே நாளில் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,06,564 ஆக உயர்ந்துள்ளது.