உலகம் முழுவதும் தீயாக பரவும் கொரோனா - 14 கோடி பேர் பாதிப்பு - 30 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 14,05,03,012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,11,475 பேர் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
டெல்லி : உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,05,03,012 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 30,11,475 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 11,93,24,760 பேர் மீண்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மொத்தம் 14 கோடிக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 8,28,075 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 1,80,97,718 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் இருந்து 11,93,24,760 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு 12,488 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,11,475 பேராக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 233,943 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,521,683 பேராக அதிகரித்துள்ளது ஒரே நாளில் 1,338 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 16,79,121பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 81,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,23,05,898கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 579,939 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 76,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,34,342 பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,070 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 369,024 பேராக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவிற்கு பிரேசிலில் கொத்துக்கொத்தாக மரணமடைந்து வருகின்றனர்.