"செக்ஸ் டாயை" வைத்து பெண் பலாத்காரம்.. 19 வயது பெண் மீது புகார்.. போலீஸ் அதிரடி கைது
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: எங்காவது இப்படிக்கூட நடக்குமா? பெண்ணை செக்ஸ் பொம்மையை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சில மாதத்துக்கு முன்பு தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
அதே நேரத்தில் ஒருவரின் விருப்பம், அனுமதியில்லாமல் தன் பாலின உறவுக்கு வலுக்கட்டாயமாக பணித்தலும் குற்றம் என்று கோர்ட் தெளிவுபடுத்தி இருந்தது.
பாலியல் பலாத்காரம்
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்வலையை எழுப்பியதுடன், அது சம்பந்தமான விவாதங்களும் இன்னும் முழுமையாக அடங்கவில்லை. ஆனால் அதற்குள் ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தினால் நாடு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது. டெல்லியை சேர்ந்த பெண் ஷிவானி. வயது 19தான் ஆகிறது.
பாலியல் வன்புணர்ச்சி
இவர் இன்னொரு பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதாவது செயற்கையான ஆணுறுப்பு கருவியை (செக்ஸ் டாய்) பயன்படுத்தி இப்படி ஒரு வன்மத்தை அந்த பெண் அரங்கேற்றி உள்ளார். மேலும் வாய் புணர்ச்சியிலும் அப்பெண் ஈடுபட்டுள்ளார்.
திகார் ஜெயிலில்
தொடர்ச்சியாக பலமுறை இந்த கட்டாய பாலியல் வன்புணர்ச்சி நடந்துள்ளது. இதையடுத்து டெல்லி போலீசார் அந்த பெண்ணை கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். இது சம்பந்தமாக போலீசிலும் புகார் செய்யப்பட்டிருக்கிறது.
மறுத்துவிட்டனர்
ஆனால், முதலில் போலீஸார் "‘ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது, அதற்கு சட்டத்தில் இடம் இல்லை" என்று சொல்லி புகாரை எடுத்து கொள்ள மறுத்து விட்டனர்.
சட்டப்பிரிவு 377
ஆனால் சட்டப்பிரிவு எண் 377-ன் கீழ் தன் பாலின சேர்க்கை தடை நீக்கம் செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லி உள்ளதால், முதல் முறையாக அதே சட்டத்தின் குற்றப்பிரிவுக்கு கீழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.