தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சர் உதயகுமார் இமேஜை டேமேஜ் செய்த முதல்வர்... அமைச்சர்களின் கருத்து அரசு கருத்தல்லவோ?

Google Oneindia Tamil News

தருமபுரி: தமிழகத்தின் 2-வது தலைநகரம் தொடர்பாக அமைச்சர்கள் கூறுவது அவரவர் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அரசு கருத்து கிடையாது எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    மதுரையை இரண்டாவது தலைநகராகக்க வேண்டும் - ஆர். பி. உதயகுமார் தீர்மானம்

    இதன்மூலம் இரண்டாவது தலைநகரம் விவகாரத்தை கிளப்பிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இமேஜே டேமேஜ் செய்துள்ளார்.

    முதல்வர் பேச்சில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியது யாதெனில், அமைச்சர்களின் கருத்தும் அரசின் கருத்தும் ஒன்றல்ல என்பது தான்.

     EXCLUSIVE: சென்னையை தலைநகரா அறிவிச்சே ஆகணும்.. 2வது நாடாளுமன்றமும் கட்டுங்க: எம்பி ரவிக்குமார் EXCLUSIVE: சென்னையை தலைநகரா அறிவிச்சே ஆகணும்.. 2வது நாடாளுமன்றமும் கட்டுங்க: எம்பி ரவிக்குமார் "நச்"

    மதுரை அரசியல்

    மதுரை அரசியல்

    கடந்த வாரம் முழுவதும் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பெரும் பஞ்சாயத்து நடைபெற்றது. அதற்கு அடித்தளமே மதுரை தான், அமைச்சர் செல்லூர் ராஜூ முதல்வர் வேட்பாளர் பற்றி தனது பேட்டியில் ஒரு கருத்தை கூற அதற்கு மாறுபட்ட வகையில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் மற்றொரு கருத்தைக் கூற அது பூதாகரமாகியது. கூட்டறிக்கை மூலம் ஒரு வழியாக அந்த பிரச்சனை தற்காலிக முடிவுக்கு வந்தது.

    அமைச்சர் உதயகுமார்

    அமைச்சர் உதயகுமார்

    அதிமுகவில் எழுந்த பரபரப்பு ஓய்ந்த 2 நாட்களுக்குள் அடுத்த பரபரப்பை உருவாக்கினார் அமைச்சர் உதயகுமார். மதுரை மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை 2-வது தலைநகராக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினார். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தொழில் வர்த்தக சபையினரை வரவழைத்து கலந்தாய்வு கூட்டத்தை கூட தனது தலைமையில் நடத்தியுள்ளார்.

    திருச்சி மாவட்டம்

    திருச்சி மாவட்டம்

    அமைச்சர் உதயகுமார் கோரிக்கைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருப்பது வேறு யாருமல்ல. இதே அதிமுக அரசில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவருமான வெல்லமண்டி நடராஜன் தான். எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டங்களில் ஒன்று திருச்சியை 2-வது தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது எனக் கூறியுள்ள அவர் திருச்சியை தான் 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என போர்க்குரல் கொடுத்து வருகிறார்.

    தர்மசங்கடம்

    தர்மசங்கடம்

    திருச்சி மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் திருச்சியை 2-வது தலைநகராக்க பல தரப்பினரும் ஆதரவும், குரலும் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக கருதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2-வது தலைநகரம் விவகாரத்தில் அமைச்சர்களின் கருத்து அரசு கருத்தல்ல என்றும் அவரவர் கருத்தாக இருக்கலாம் என்றும் தருமபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    கேள்விக்குறி

    கேள்விக்குறி

    அமைச்சர் ஒருவரின் கருத்து அரசின் கருத்தல்ல அவரது தனிப்பட்ட கருத்து என முதல்வர் கூறியிருப்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும். இதன் மூலம் அமைச்சர்கள் மீதும் அவர்கள் அளிக்கும் உறுதிகள் மீதும் மக்கள் வைக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாக கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    cm edappadi palanisami says, opinion of the ministers is not the opinion of the govt
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X