தருமபுரியில் முதல் கொரோனா பாதிப்பு- கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் தப்பியது
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பே இல்லை என்கிற நிலை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது தருமபுரியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 35 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் கொரோனா பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கொரோனா.. மக்களை முழுமையாக காக்க 'சிறப்பு செயலாற்று குழு' அமைக்க கோரி ஹைகோர்டில் வழக்கு
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பே இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.