பெரியய்யா, சின்னய்யா..! சத்தியமா நான் சொல்லல.. தருமபுரி கூட்டத்தில் பாமகவை கழுவி ஊற்றிய ஸ்டாலின்
தருமபுரி:ஆளும் அதிமுக ஊழல் அரசு என்று பட்டியல் போட்டு கொடுத்த ஆளுநரிடம் மனு அளித்த பாமக, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
Recommended Video
தருமபுரி மாவட்டம், ஒடிசல்பட்டியில் திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை வேட்பாளர் மணிக்கும் அவர் வாக்கு சேகரித்தார்.
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். நாடும் நமதே... 40ம் நமதே என்ற முழக்கத்துடன் ஸ்டாலின் தமது பிரச்சாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:தமிழகத்திலே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக அவரிடம் நான் வாக்குறுதி வழங்கினேன். ஆனால்.. அதை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
எத்தனை தடவை சொல்றது...? 100 % வெற்றி எங்களுக்கு தான்.. சொல்லும் அமைச்சரின் வாரிசு
ஓய்வில் கலைஞர்
கலைஞர் கற்று தந்திருக்கிற பண்பாடு, அரசியல் நம்மிடம் இருக்கிறது. தோல்வி என்பதையே அறியாத, ஓயாமல் உழைத்து கொண்டிருந்த அவர் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆட்சி கவிழ்ந்துவிடும்
தற்போது லோக்சபா தேர்தலோடு, 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. 18 எம்எல்ஏக்கள் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால்... எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழ்ந்து விடும்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப் போகிறது. அதில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் பதவிகள் நிச்சயம் பறிபோகும்.
தேர்தல் வாக்குறுதிகள்
18 மாதங்களாக 18 தொகுதிகளில் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட வில்லை. தருமபுரி அரூர் மொரப்பூர் 4 வழிச்சாலை, தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தரம் உயர்த்தப்படும். விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்னையை தீர்வு காணப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணி எப்படி?
தேர்தலில் தோற்கபோகிறோம் என்று தெரிந்து தான் அதிமுக கூட்டணி அமைத்து இருக்கிறது. நாமும் கூட்டணி அமைத்திருக்கிறோம். இப்போது நம்முடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் 3 ஆண்டுகளாக நம்முடன் இருக்கின்றன. தேர்தலில் தோற்கபோகிறோம் என்று தெரிந்து தான் அதிமுக கூட்டணி அமைத்து இருக்கிறது. நாமும் கூட்டணி அமைத்திருக்கிறோம். இப்போது நம்முடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் 3 ஆண்டுகளாக நம்முடன் இருக்கின்றன.
கூட்டணி எதற்காக?
ஆனால் அதிமுகவில் கொடுக்க வேண்டியதை கொடுத்து, நோட்டையும் கொடுத்து யாமறியும் பராபரமே, பாஜக, அதிமுக கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணி உருவாகும் முன்பே அதிமுகவின் தம்பிதுரை சொன்னது என்ன?
பாஜக வாக்கு வங்கி
நோட்டாவைவிட ஓட்டு வாங்குவோம் என்று பாஜகவுக்கு தெரியும். ஆனால், அதிமுகவை மிரட்டி கூட்டணி அமைத்திருக்கிறது. குட்கா, வருமானவரி, கொடநாடு என பிரச்சனை காட்டி மிரட்டியிருக்கிறது.
அதிமுகவின் கதை
அவர்களோடு இன்னொருத்தர் சேர்ந்திருக்கிறார். பெரியய்யா, சின்னய்யா.. அவர்கள் ஆதரிக்கிறது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அவர்கள் எழுதி வெளியிட்ட அதிமுகவின் கதை இப்போது நமக்கு உதவியாக இருக்கிறது. அதிமுக மணல் கொள்ளை பற்றி பாமக விரிவாக குற்றச்சாட்டுகள் சொல்லி இருக்கிறது.