தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தருமபுரி: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் தருமபுரியில் 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரின் கோரிக்கையை ஏற்று சட்டக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது. விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. விவசாயிகளுக்கு அதிக அளவில் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஊரை கூட்டி கிடா (கொரோனா) விருந்து.. 46 பேருக்கு தொற்று.. அடுத்தடுத்து 3 பேர் பலி
சிறு,குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச விதை நெல் வழங்கப்படும். குடிமராமத்து பணிகள் மூலம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன என்றார்.