தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக
Recommended Video
தருமபுரி: தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 111 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில தமிழகம் மற்றும் புதுவையில் 38 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஒரு இடத்தில்(தேனியில்) அதிமுக முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது சுற்று முடிவில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 57 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் 46214 பெற்று இருந்தார். இதனால் அன்புமணி ராமதாஸ் 11 ஆயிரத்து 89 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் அந்த வித்திசாயம் 3வது சுற்று முடிவில் சரிந்து திமுக வேட்பாளர் முன்னிலைக்கு வந்துள்ளார். அன்புமணி ராமதாஸை விட திமுக வேட்பாளர் செந்தில்குமார் தற்போது 1500 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. பெற்ற வாக்குகள் மற்றும் முழுவிவரங்கள் விரைவில் தெரிந்துவிடும்.