திமுகவுக்கு ஆதரவு... சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரச்சாரம்
ர்மபுரி: தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்கு சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவாக, சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சமீபத்தில், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் பண்ருட்டி வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.
இந்தநிலையில், தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட நத்தமேடு, ஜாலியூர், ஐய்யம்பட்டி கிராமங்களில் உள்ள 8 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, நத்தம்மேடு பகுதியில் திமுக மக்களவை வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மோடியை கிண்டல் செய்ய நினைத்து, ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியிடம் மாட்டிக்கொண்ட ராகுல் காந்தி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கனிம வளங்களும் சூறையாடப்படும் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.