தாலி கட்ட போறியா இல்லையா.. வாட்ஸ்அப்பில் மிரட்டல் வீடியோ விடுத்த காதலியை மணந்த இளைஞர்!
வங்கி பெண் அதிகாரிக்கு இளைஞருடன் திருமணம் நடந்தது
தர்மபுரி: திருமணம் செய்ய மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த பெண்ணையே.. காதலித்த இளைஞர் திருமணம் செய்து கொண்டார். போலீசாரின் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.. 25 வயதாகிறது... அரூர் பகுதியில் ஒரு பிரைவேட் வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே பேங்கில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது.. இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். நாள் ஆக ஆக.. அருண்குமார் ராஜேஸ்வரியுடன் பழகுவதை குறைக்க ஆரம்பித்தார்... கல்யாண பேச்சை ராஜேஸ்வரி எடுத்தாலே அதற்கு அவர் மறுப்பு சொன்னார்.
இந்நிலையில், அருண்குமாருக்கு அவர் வீட்டில் பெற்றோர்கள் கல்யாணத்துக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்பு அரூர் மகளிர் ஸ்டேஷனிலும், தர்மபுரி எஸ்பி., ஆபீசிலும் புகார் மனு தந்தார்.. இதையடுத்து எஸ்பியின் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, தனக்கு உரிய நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றினை ராஜேஸ்வரி வெளியிட்டார். இந்த வீடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் தர்மபுரி மகளிர் போலீசார் ராஜேஸ்வரி, அருண்குமாரை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் ராஜேஸ்வரியை கல்யாணம் செய்ய அருண்குமார் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து தர்மபுரி மகளிர் ஸ்டேஷன் எதிரே உள்ள விநாயகர் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்தது.. உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.. அத்துடன் போலீசாரும் தங்கள் வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்தனர்.