ரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்!
17 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஏமாற்றி உள்ளார்
திண்டுக்கல்: ரூம் போட்டு 17 வயது பெண்ணை சீரழித்த இளைஞர்.. கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி... பஸ் ஸ்டேண்டில் அம்போன்னு தவிக்க விட்டு போன சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். 2 மாசத்துக்கு முன்னாடி மதுரைக்கு குடும்பத்துடன் வந்தார்.
ரயிலிலேயே ஒரு இளைஞர் அறிமுகமாகி உள்ளார். பெயர் சையது இப்ராகிம் என்றும், திண்டுக்கல்லில் காலேஜ் படித்து வருவதாகவும் சொல்லி உள்ளார். ரயிலிலேயே லவ் வந்துவிட்டது. ரயிலிலேயே செல்போன் நம்பரையும் ஒருத்தருக்கொருத்தர் தந்து கொண்டனர்.
பிறகு தினந்தோறும் செல்போனில் காதல் வளர்ந்தது. எப்ப பார்த்தாலும் செல்போனில் மகள் பேசுவதையும், நடவடிக்கையையும் அறிந்த பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் கேட்கவில்லை.
இதனிடையே போன மாசம் சங்கீதாவை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்த இப்ராகிம், ஒரு தனியார் இடத்தில் வைத்து ஜாலியாக இருந்திருக்கிறார். இந்த சம்பவத்துக்கு பிறகு செல்போனில் பேசுவது இன்னும் அதிகமாகிவிட்டது. இதனால் கோபம் அடைந்த பெற்றோர், செல்போனை பிடுங்கி வைத்துவிட்டனர்.
இந்த விஷயத்தை இப்ராஹிடம் சொல்லிய சங்கீதா, கல்யாணம் பண்ணி கொள்ளும்படி சொல்லி அழுதுள்ளார். இதனால் இப்ராஹிம், சங்கீதாவை திண்டுக்கல்லுக்கு வருமாறு சொல்லவும், அதன்படியே சங்கீதாவும் வந்தார். திண்டுக்கல் பஸ் ஸ்டேண்டில் சங்கீதாவை நிற்க சொன்ன இப்ராஹிம், வீட்டுக்கு போய் சம்மதம் வாங்கிட்டு, திரும்பவும் வந்து கூட்டிட்டு போறேன் என்று சொல்லி விட்டு போனவர்தான்.. வரவே இல்லை..
சங்கீதா நீண்ட நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்து கொண்டே இருந்தார். ரொம்ப நேரம் ஒரு வயசு பெண் தனியாக நிற்கவும், பஸ் ஸ்டேண்டில் சுற்றி திரியும் சிலர் அவளை தப்பாக நினைத்துவிட்டு, விபச்சாரத்துக்கும் அழைத்துள்ளனர். இதனால் பஸ் ஸ்டேண்டிலேயே கதறி அழுதுள்ளார் சங்கீதா.
பிறகு அங்கிருக்கும் கடைக்காரர்கள் என்ன ஏதென்று சங்கீதாவிடம் விசாரிக்கவும்தான் விஷயத்தை சொல்லி தேம்பி தேம்பி அழுதார். இதையடுத்து, திண்டுக்கல் மகளிர் ஸ்டேஷனில் கொண்டுபோய் சங்கீதாவை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இப்போது விசாரணை நடக்கிறது!