மிரள வைத்த "ஹோமோ".. 18 வயது வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்.. ஷாக்கில் திண்டுக்கல்
ஹோமோ தகராறு காரணமாக இளைஞரை கொன்ற தொழிலாளி கைதானார்
திண்டுக்கல்: 18 வயசு வாலிபரை ஓரின சேர்க்கை உறவுக்காக பயன்படுத்தி வந்துள்ளார் ஒரு கூலி தொழிலாளி.. இறுதியில் அந்த இளைஞரை அநியாயமாக கொலையும் செய்துவிட்டார்.. வாலிபரின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி.. இவரது மகன் ஸ்ரீகாந்த்.. 18 வயதாகிறது.. சென்னையில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பிணமாக கிடந்தார்.. அவரது கழுத்தை யாரோ மிக கொடூரமாக அறுத்துள்ளது தெரியவந்தது.. மகனின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.
யார் கொலை செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியாமல் விழித்த பெற்றோர், இதுதொடர்பாக நத்தம் போலீசாருக்கும் தகவலை சொன்னார்கள். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீகாந்தின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அதன்பிறகு விசாரணையும் துரிதமானது.. கிராம மக்களிடம் ஸ்ரீகாந்த் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர்.
அந்த நேரம் பார்த்து, அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார்.. அவருக்கு 33 வயதாகிறது.. கூலி வேலை செய்பவர்.. ஊருக்கு வெளியே ஒரு மாமரத்தில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.. இதனால் போலீசாருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது.. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து 2 மரணங்களையும் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போதுதான், ராமச்சந்திரனுக்கும், ஸ்ரீகாந்துக்கும் தவறான உறவு முறை இருந்து வந்தது தெரியவந்தது.. இருவருமே ஓரின சேர்க்கை முறையில் தம்பதியை போல சில காலம் வாழ்ந்து வந்துள்ளனர்.. சம்பவத்தன்றும் தவறாக இருக்க முயன்றபோதுதான், இவர்களுக்குள் தகராறு வந்துள்ளது.
அந்த ஆத்திரத்தில்தான் ஸ்ரீகாந்தை ராமச்சந்திரன் கொலை செய்துள்ளார்.. போலீசார் ஊருக்குள் விசாரித்து வருவதை பார்த்த ராமச்சந்திரன், பயந்து போய் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதும் தெரிய வந்தது. இது தொடர்பாக ஒரு லெட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளது.. நடந்த கொலை மற்றும் தற்கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது.