திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ளது கக்கன் நகர். இப்பகுதியைச் சேர்ந்த 8 வயதாகும் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி உடலில் படு காயங்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக அந்த பகுதியில் பெற்றோர் விசாரித்தனர். அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள், பிஞ்சு குழந்தை என்றும் பார்க்காமல் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.
"ஆதாரம் எதுவுமே இல்லை".. 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் திமுக மாஜி எம்எல்ஏ விடுதலை: ஹைகோர்ட்
இதனையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 4 காமுக சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.