மெட்டி ஒலி புகழ் சின்னத்திரை நடிகர் விஜயராஜ் காலமானார்
பழனி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 43.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவரக் விஜயராஜ் (43). இவர் சின்னத்திரை நடிகராவார். மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் எம்டன் மகன் படத்தில் நடித்துள்ளார். வராரு வராரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். பழனியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென இன்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்தது.
[சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து.. 14 பேர் பலி : 40 பேர் படுகாயம்]
Comments
English summary
ACtor Vijayaraj passes away of Cardiac arrest in Palani. He was at 43.
Story first published: Sunday, November 4, 2018, 11:04 [IST]