பழனி சட்டசபை தொகுதியை எங்களுக்குதான் ஒதுக்க வேண்டும்... ஆரம்பித்தது பாஜக அடம்
திண்டுக்கல்: பழனி சட்டசபை தொகுதியை தங்களுக்குதான் ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்துக்கு அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். அப்போது சட்டசபை தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பாஜக எத்தனை தொகுதிகளை அதிமுகவிட கேட்கும்? பாஜக கேட்கும் அத்தனை தொகுதிகளையுமே அதிமுக அள்ளி தருமா? இதனை அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகனின் வேல் யாத்திரை நிகழ்ச்சி பழனியில் நடைபெற்றது. இதில் பேசிய முருகன், பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஸ்டாலின் காணும் கனவு... கனவாகவே போகும் - வேல் யாத்திரையில் பேசிய எல். முருகன்
தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியை அதிமுக பாஜகவுக்குதான் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.