திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல்: ஓசி பிரியாணிக்காக கொரோனா கவலை இல்லாமல் முண்டியடித்த கூட்டம்- திணறிய பாஜக நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பாஜக நிகழ்ச்சியின் முடிவில் அழைத்துவரப்பட்ட கூட்டத்தினர் ஓசி பிரியாணிக்காக முண்டியடிக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாஜகவினர் தடுமாறினர்.

Recommended Video

    ஓசி பிரியாணிக்காக கொரோனா கவலை இல்லாமல் முண்டியடித்த கூட்டம்.. திணறிய பாஜக நிர்வாகிகள் - வீடியோ

    நிலக்கோட்டையில் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சசிகுமார் ஆகியோர் தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பங்கேற்றார்.

    BJP hold meeting Without Coronavirus precautions in Dindigul

    இந்த இணைப்பு விழா பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது. அதுவரை பொறுத்திருந்த விழாவிற்கு வந்த ஆண்கள், பெண்கள் கூட்டம் முடியும் முன்னே உணவு சமைக்கும் இடத்துக்கே போய் தங்களுக்கு பிரியாணி தரக் கோரி முண்டியத்து நின்றனர். பலரும் பிரியாணியை அவர்களாகவே அள்ளிக் கொண்டும் சென்றனர்.

    சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்!சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்!

    அதுவும் கொரோனா பரவலைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் முக கவசமும் அணியாமல் நெருக்கடியடித்துக் கொண்டு பிரியாணிக்காக கூட்டம் அலைமோதியது. இவர்களைக் கட்டுப்படுத்த பாஜக நிர்வாகிகள் ரொம்பவே சிரமப்பட்டனர்.

    English summary
    BJP hold a meeting Without Coronavirus precautions in Nilakottai, Dindigul.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X