For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்!

Google Oneindia Tamil News

லடாக்: பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவ வல்லுநர்களை தற்போது இந்தியா லடாக் எல்லைக்கு அனுப்பி உள்ளது. இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Surgical strike வல்லுநர்களை ladakh அனுப்பிய India

    இந்தியா சீனா இடையில் லடாக் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எதுவும் பலன் அளிக்கவில்லை. இரண்டு நாட்டு பிரச்சனை கண்டிப்பாக பெரிதாக வாய்ப்புள்ளது என்றும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

    அதோடு லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. கல்வான், பாங்காங் திசோ, டெப்சாங் பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் அங்கு பதிலுக்கு படைகளை குவித்து வருகிறது.

    அதே அதே "பேட்டர்ன்".. சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளது.. லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை.. பின்னணி!

    என்ன படை

    என்ன படை

    இந்த நிலையில் பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவ வல்லுநர்களை தற்போது இந்தியா லடாக் எல்லைக்கு அனுப்பி உள்ளது. இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் போர்ஸ் எனப்படும் சிறப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆவர். இவர்கள் எப்போதும் முக்கியமான ஆபரேஷன் இருந்தால் மட்டுமே களமிறக்கப்படுவார்கள்.

    லடாக் சென்றனர்

    லடாக் சென்றனர்

    தற்போது இவர்கள் லடாக்கில் வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பெஷல் போர்ஸ் வீரர்கள் லடாக் எல்லையில் களமிறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வீரர்கள் அங்கே களமிறக்கப்பட்டு உள்ளனர். அங்கே தற்போது அந்த வல்லுநர்கள் மற்றும் வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் லடாக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    2017ல் பாகிஸ்தானில் இவர்களின் உதவி மற்றும் ஆலோசனையின் மூலம்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத தளங்கள் விமான தாக்குதல் மூலம் அடித்து நொறுக்கப்பட்டது. லடாக்கில் உள்ள சீனாவின் முகாம்களை தேவைப்பட்டால் இந்தியா அடித்து நொறுக்க நேரிடும். இதனால் அங்கு திட்டங்களை வகுக்கும் வகையில் தற்போது இந்த ஸ்பெஷல் போர்ஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    எந்த இடம்

    எந்த இடம்

    முக்கியமாக இந்த படை கிழக்கு லடாக் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது. சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இவர்களுக்கு தனியாக திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் லடாக்கில் எப்போது வேண்டுமானாலும் அதிரடிகள் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    அதிரடி முடிவு

    அதிரடி முடிவு

    இந்தியாவிடம் மொத்தம் 12 ஸ்பெஷல் படைகள் உள்ளது. இந்த படைகள் எல்லாம் வெவ்வேறு பணிகளை, பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடல், வானம், மலை என்று பல நிலப்பரப்பை மையமாக வைத்து இவர்கள் இயங்குவார்கள். தற்போது மலைகளில் சிறப்பாக செயல்பட கூடிய ஸ்பெஷல் போர்ஸ்தான் லடாக் அனுப்பப்பட்டுள்ளது.

    English summary
    China standoff with India: India sends special force capable of doing Surgical strike to Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X