திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நள்ளிரவில் டக்கென வந்த கணவன்.. காதலனை கட்டிலுக்கு அடியில் மறைத்த மனைவி.. இறுதியில் செம்ம அதிர்ச்சி

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், காதலனை கட்டிலுக்கு அடியில் மனைவி மறைத்து வைத்திருப்பதை பார்த்து ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த கணவன் போலீசார் புகார் அளிக்க சென்றார்.

Recommended Video

    கள்ளக்காதலுடன் கையும் களவுமாக சிக்கிய மனைவி எடுத்த விபரீத முடிவு.. நொந்து போன கணவர் - பேட்டி

    கணவனுக்கு தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு கல்யாணமாகி நாகலட்சுமி என்ற மனைவி உள்ளது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    தவறான பழக்ம்

    தவறான பழக்ம்

    கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேல்முருகன், பணிபுரிந்து வருகிறார். வேல்முருகன் வேலைக்கு சென்ற பின் வீட்டில் தனியாக மனைவி நாகலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது நாளடைவில் கள்ளக்காதலாக உறவாக மாறியுள்ளது.

    கதைவை திறக்காத நாகலட்சுமி

    கதைவை திறக்காத நாகலட்சுமி

    இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை பணி தாமதமாக முடிந்ததால் நள்ளிரவில் வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார். கதவை நீண்ட நேரம் தட்டியும் மனைவி நாகலட்சுமி திறக்காமல் உள்ளேயே இருந்துள்ளார். தூங்கியவர் எழாமல் இருந்திருப்பார் என்று வேல்முருகன் நினைத்திருக்கிறார்

    கட்டிலுக்குள் அடியில் கள்ளக்காதலன்

    கட்டிலுக்குள் அடியில் கள்ளக்காதலன்

    அதன்பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக தாமதமாக மனைவி கதவை திறந்துள்ளார். உள்ளே சென்றே வேல்முரகன் தனது ஆடைகளை மாற்றி உள்ளார். இந்நிலையில் கட்டிலுக்கு அடியில் ரமேஷ் என்பவர் மறைந்து இருந்ததை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார் .

    அடித்தார்

    அடித்தார்

    ஏன் இப்படி செய்தீர்கள் என்று கூறி ஆத்திரத்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை வேல்முருகன் தாக்கி உள்ளார். உங்களை சும்மாவிடாமாட்டேன் என கூறியபடி போலீஸ் ஸ்டேசனில் சென்று வேல்முருகன் புகார் அளித்துளளார்.

    அவமானத்தில் விபரீத முடிவு

    அவமானத்தில் விபரீத முடிவு

    ஆனால் போலீசார் இந்த விஷயம் குறித்து காலையில் வந்து புகார் அளிக்குமாறு வேல்முருகனை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதற்கிடையே வீட்டில் இருந்த மனைவி நாகலட்சுமீ , கணவனுக்கு தனது தகாத உறவு தெரிந்துவிட்டதே என்று வேதனை அடைந்ததுடன், அவமானத்தில் வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் வீட்டிற்கு வந்து பார்த்த வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    English summary
    In Vedasandur, Dindigul district, the husband went to the police to lodge a complaint after wife hiding her boyfriend under the bed. The wife, shocked by what her husband knew, hanged himself.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X