திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறுதி கட்ட பிரசாரத்தில் உளறல்.. அதென்ன பாமகவை மட்டும் சோதிக்கும் திண்டுக்கல் சீனிவாசன்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: இறுதி கட்ட பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டினார்.

நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. திண்டுக்கல் மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இறுதி நாளான நேற்று பிரசாரம் செய்தார்.

வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம் விளக்கம் வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம் விளக்கம்

அதிர்ச்சி

அதிர்ச்சி

அப்போது அவர் பேசுகையில் பாமக வேட்பாளர் சோலைமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சி அடைந்து அமைச்சரை பார்த்தார்.

உளறல்

உளறல்

உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர் ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார். மேலும் பேச்சை தொடர்ந்த அமைச்சர், இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மம்தா பானர்ஜி, சரத்குமார் என்றார். சரத்பவார் என அருகிலிருந்தவர்கள் திருத்தினர்.

ஆப்பிள் சின்னம்

ஆப்பிள் சின்னம்

இது போல் முன்பு ஒருமுறை பேசியபோது இதே ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர், ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள். பின்னர் உடனிருந்தவர்கள் திருத்தியதை அடுத்து மாம்பழ சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

அது என்ன பாமக வேட்பாளருக்கு பிரசாரம் செய்யும் போது மட்டும் அமைச்சர் உளறுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இறுதி கட்ட பிரசாரத்தில் வேட்பாளரின் பெயரையே மாற்றி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Dindigul Srinivasan wrongly calls PMK candidate Jothimuthu as Solai muthu in last day of campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X