காதலர்களை சேர்த்து வைத்த திண்டுக்கல் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த பரிசு.. டிஐஜி அதிரடி உத்தரவு
திண்டுக்கல்: காதல் திருமணம் செய்த காவலரை காதலியுடன் சேர்த்து வைப்பதற்காக கடந்த 17ம்தேதி திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கவுன்சிலிங் நடந்தது. அப்போது காதலர்களை சேர்த்து வைத்த காவல் ஆய்வாளர் வசந்தி, வழக்கறிஞர் தியாகுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரையடுத்து வசந்தியை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த மனோஜ்குமார் (30) திருவண்ணாமலையில் காவலராக பணியாற்றுகிறார். இவர் தனது தங்கையின் தோழியான திண்டுக்கல்லை சேர்ந்த சத்யாவை (26) காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணமான 3 மாதத்தில் கருத்து வேறுபாட்டில் சத்யா பிரிந்து சென்றார். இந்நிலையில் மனோஜ்குமார், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு மனு அளித்தார்.
இதையேற்று காவல் ஆய்வாளர் வசந்தி கவுன்சலிங் கொடுப்பதற்கு இருவரையும் அழைத்து இருந்தார். இதன்படி காதல் திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் பிரிந்த காவலர் மனோஜ்குமார் - சத்யா ஜோடிக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி கவுன்சலிங் நடத்தினார்.
{photo-feature}