கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு.. ரயில் முன் பாய்ந்து 4 பேர் தற்கொலை!
திண்டுக்கல்: விழுப்புரத்தில் 5 பேர் கொண்ட குடும்பம் தற்கொலை செய்த பதட்டம் தணியாத நிலையில் கொடைக்கானல் அருகே நான்கு பேர் கொண்ட குடும்பம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கொடைரோடு ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் உடல் சிதறி கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு சிதறிகிடந்த ஆதார் அட்டையில் இறந்தவர்கள் திருச்சி மாவட்டம் உரையூரைச் சேர்ந்த உத்தர பாரதி என்பதும், இவர் அப்பகுதியில் மருந்து கடை ஏஜென்சி எடுத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவரது மனைவி சங்கீதா மற்றும் மகள் அபிநயா சரி பத்தாம் வகுப்பும், மகன் ஆகாஷ் ஏழாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
மேலும் அவர்களில் ஒருவர் பாக்கெட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் மற்றும் கொடைரோட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சென்ற பஸ் டிக்கெட்டுகளும் இருந்தன. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. சாக வச்சுட்டீங்களேடா.. பதற வைத்த விழுப்புரம் தற்கொலை!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினையால் இவர்கள் நான்கு பேரும் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.