அன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்!
கொடைக்கானல்: அன்னையர் தினத்தில் சமூக போராளியான 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. அம்மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மிக மோசமான தோல்வியைத் தழுவினார்.
இதையடுத்து தமிழகத்தின் கொடைக்கானல் இரோம் சர்மிளா தஞ்சமடைந்தார். கடந்த 2017-ம் ஆண்டு தேஸ்மந்த் கொட்டின்கோவை கொடைக்கானலில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்று இரோம் சர்மிளாவுக்கு கொடைக்கானல் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என சமூக செயற்பாட்டாளர் திவ்யா பாரதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திவ்யா பாரதி பாதிக்கப்பட்ட போது இரோம் சர்மிளா அவருக்காக குரல் கொடுத்தார். அதன் பின்னர் இரோம் சர்மிளா திருமணத்தின் போது திவ்யா பாரதிதான் உடன் இருந்தார்
அன்னையர் தினத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த இரோம் சர்மிளாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
அரசியல் செய்ய ஒன்றும் இல்லை... நல்லகண்ணு விவகாரத்தில் சரத்குமார் கருத்து