தேனீக்களை போல் மொய்க்கும் சுற்றுலா பயணிகளால்... நிரம்பி வழியும் கொடைக்கானல்
கொடைக்கானல்: தேனீக்களை போல், சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் மொய்த்து இருப்பதால், விடுமுறை தினமான இன்று கொடைக்கானல் நகரமே நிரம்பி வழிந்து காணப்படுகிறது.
வெயில் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காகவும், குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காகவும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக பல ஆயிரம் மக்கள் தினமும் படையெடுத்து வருகிறார்கள்.
கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்தே கொடைக்கானல் நகரம் சுற்றலாப் பயணிகளால் களை கட்டி காணப்படுகிறது.
சென்னையில் குளுகுளு ஏசி புறநகர் ரயில்களை இயக்க திட்டம்... முக்கிய ஆலோசனை குறித்து தகவல்
குறிப்பாக விடுமுறை தினமான நேற்றும், இன்றும் பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி,, மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் மக்கள் தேனீக்கள் போல் மொய்க்கின்றனர்.
எங்கும் மனித தலைகளையே பார்க்க முடிந்தது. இதனால் லாட்ஜ்களும் நிரம்பி வழிந்துள்ளன. இதனால் வாகனங்களின் அதிக அளவிலான வருகையால் போக்குவரத்து நெரிசலும் கொடைக்கானலில் ஏற்பட்டது.