திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா இருக்குனு பாருங்க''... மேடையில் உளறிக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தமிழகத்தில் இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசியது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் சில அமைச்சர்கள் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் சமீபகாலமாக உளறிக்கொட்டி வருவது வழக்கமாகிவிட்டது.

Minister dindigul Srinivasan spoke against the Tamil Nadu government

திண்டுக்கல்லில் அ.தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 தரக்கூடாது என்று நீதிமன்றத்தில் தி.மு.க.வினர் தடை உத்தரவு கேட்டனர். ஆனால் நீதியரசர்கள் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதனால் நாமெல்லாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு ரூ.2500ஐ பெற முடிந்தது.

இதை வாழ்த்த மாட்டீர்கள். ஆனால் நீங்கள் சொன்னதையெல்லாம் நாங்கள் கொடுத்தாச்சு என்றால் கேட்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு புத்தி எங்க போச்சு அறிவு என்று தான் சொல்வார்கள்" எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் ''தயவு செய்து இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க்கிட்டு இருக்கிறது என்று சிந்தியுங்கள்" என பேசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் மேடையில் அமைச்சர் உளறிக் கொட்டியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

English summary
Minister Dindukkal Srinivasan's speech on the platform to see how disgusting this regime is in Tamil Nadu caused a stir among the volunteers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X