இவர் யாரென்று தெரிகிறதா? செம பந்தாவாக- சிங்கிளாக கொடைக்கானலை தெறிக்கவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ!
கொடைக்கானல்: தமிழக அமைச்சர்களில் ரொம்பவும் அதிகமாக மக்களால் பேசப்பட்ட பெருமைக்குரியவர் அமைச்சர் செல்லூர் ராஜூ.. அவருக்கும் கொடைக்கானல் ஏரிக்கும் என்ன தொடர்பு?... அந்த வைகை அணை மேட்டர் எல்லாம் இல்லீங்க
Recommended Video
சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்காக கட்சிக்காரர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களோடு கோடைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துவிட்டனர்.
தமிழகத்துக்கு கூடுதலாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புங்க...பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
குஷியில் கொடைக்கானல்
கொரோனாவால் படுத்துக் கிடந்த இந்த கோடை வாசஸ்தலங்கள் இப்போது இந்த அரசியல் கட்சிக்காரர்கள் புண்ணியத்தால் மெல்ல மூச்சுவிட்டுப் பார்க்கின்றன. இந்த பட்டியலில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலும் உண்டு.
கொடைக்கானலில் ஸ்டாலின் குடும்பம்
கொடைக்கானலில் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் தமரா ஹோட்டலில் டேரா போட்டுள்ளார். ஆனால் கட்சிககாரர்கள் யாரையும் அந்த ஏரியா பக்கமே அனுமதிக்காமல் இருக்கின்றனர். கொடைக்கானலில் எங்க திரும்பினாலும் கரைவேட்டிகள், கட்சி கொடி பறக்கும் கார்கள்..
கொடைக்கானல் ஏரியில் வாக்கிங்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் கொடைக்கானல் ஏரி பகுதியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். அப்போது கறுப்பு பேண்ட், இளம் மஞ்சள் டீ சர்ட் போட்ட ஒருவரும் நடைபயிற்சி போய்க் கொண்டிருந்தார். முதலில் அவரை கவனிக்காத இளைஞர்கள் ஆஹா என அவரையே பின் தொடர்ந்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ
சிறிது நேரம் கழித்து அவரை வழிமறித்து சார் ஒரு செல்பி என செல்லமாக கேட்டுக் கொள்ள அவரும் ஓகே என சொல்லி நலம் விசாரித்தார். அவர் யாரென்று கேட்கிறீர்களா? இதுவரை நீங்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் மட்டுமே பார்த்திருந்த நம்ம அமைச்சர் செல்லூர் ராஜூதானுங்க..