"டேய் தூங்கறார்டா".. பிரச்சார ஆயாசத்தில் அப்படியே அசந்து (குறட்டையுடன்) தூங்கிய மன்சூர் அலிகான்
திண்டுக்கல் அருகே மன்சூரலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
Recommended Video
திண்டுக்கல்: பாய் இல்லை.. தலைகாணி இல்லை.. கட்டாந்தரையில் அப்படியே மல்லாக்காக படுத்து குறட்டை விட்டு தூங்கிவிட்டார் மன்சூரலிகான்!
திண்டுக்கல் பகுதியில் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் எக்கச்சக்கமாக வெளுத்து வாங்கி வருகிறார் நாம் தமிழர் கட்சி! இன்றுகூட பெரியமுளையூர் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.
பிறகு மதியம் சாப்பாடு சாப்பிட்டார். சாப்பிட்டவுடன் உண்ட களைப்பு ஒரு பக்கம், வெயிலின் தாக்கம் மறுபக்கம். அதனால் அந்த பகுதியில் இருந்த ஒரு அரசு பள்ளி வளாகத்துக்குள் சென்றார்.
70 வயது பெரியவரை பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்.. சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு
கூட்டம்
அது சத்துணவு கூடமா அல்லது பள்ளியில் ஒரு அறையா என தெரியவில்லை.. அப்படியே படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டார்.
மக்கள் வேடிக்கை
தலைகாணி, பாய் எதுவும் இல்லை. மன்சூரலிகான் தூங்குவதை பார்க்க அங்கே பெரிய ஒரு கூட்டமே கூடிவிட்டது. இதைதவிர விஷயம் கேள்விப்பட்டு ஊர்ஜனங்கள் வந்து மன்சூர் தூங்குவதை பார்த்து விட்டு சென்றார்கள்.
கூச்சல்
பள்ளி மாணவர்கள் அங்கே ஒரே கூச்சல் போட்டதால் கொஞ்ச நேரத்திலேயே எழுந்துவிட்டார் மன்சூர். அவரிடம் ஆளுக்கு ஒரு பக்கம் தண்ணி, சாப்பிட கேக் என மாணவர்கள் பாசத்துடன் தருகிறார்கள்.
வீரபத்திரன்
'கேப்டன் பிரபாகரன்' படத்தில் மன்சூர்அலிகானின் பெயர் வீரபத்திரன் என்பதால், பிள்ளைகள் அனைவரும் வீரபத்திரன் என்று கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது குழந்தைகளிடம் "நல்லா படிக்கணும், சரியா.." என்று அறிவுரை செய்தார்.