திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளி துப்பாக்கி போல பட் பட் என சுட்ட தியேட்டர் அதிபர்- படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி

Google Oneindia Tamil News

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் (பழநி) நிலத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Recommended Video

    பழனி: ‘பஞ்சாமிர்த’ பழனியை உலுக்கிய ‘டுமீல்’ சம்பவம்.. சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி..!

    பழனியில் தியேட்டர் உரிமையாளர் நடராஜனுக்கும் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே ரூ1 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே திங்கள்கிழமையன்று வாக்குவாதம் நடந்தது.

    One Person died in Palani shooting incident

    இந்த வாக்குவாதத்தின் போது தம்மிடம் இருந்த கைத்துப்பாக்கியால் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் அடுத்தடுத்து சுட்டார். இதில் சுப்பிரமணி, பழனிசாமி இருவரும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சுருண்டு விழுந்தனர்.

    பழனியில் நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்- அதிரவைக்கும் சிசிடிவி லைவ் காட்சிகள்!பழனியில் நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்- அதிரவைக்கும் சிசிடிவி லைவ் காட்சிகள்!

    இதனையடுத்து இருவரும் பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சுப்பிரமணி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

    One Person died in Palani shooting incident

    இதனிடையே தமது கை துப்பாக்கியுடன் போலீசில் நடராஜன் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஏற்கனவே வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    One Person died in Palani shooting incident on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X