திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூக செயற்பாட்டாளர் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் காலமானார்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: சமூக செயற்பாட்டாளரான திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பால்பாஸ்கர் (வயது 62) மாரடைப்பால் இன்று காலமானார்.

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான பால் பாஸ்கர், கிராமப்புற ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். குறிப்பாக நூற்பாலைகளில் பணிபுரியும் பெண்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விவகாரங்களில் அக்கறையுடன் செயல்பட்டார்.

Social Activist Paul Baskar passes away

ஏழை மாணவர்களின் கல்விக்காக கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி நடத்தி வந்தார். 2011 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் பாமகவின் வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 47817 வாக்குகளுடன் 2-ம் இடம் பெற்றவர் பால் பாஸ்கர்.

மத்திய அரசின் நிதி ஆயோக் நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் பால்பாஸ்கர். கொரோனா லாக்டவுன் காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முடங்கி இருந்த வெளிமாநில இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமது அமைதி அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இடைவிடாது வழங்கினார் பால்பாஸ்கர்.

ஆன்லைனில் வேட்பு மனு- வாக்கு பதிவு, எண்ணிக்கையில் குறைவான நபர்கள்- தலைகீழாக மாறும் தேர்தல் நடைமுறை? ஆன்லைனில் வேட்பு மனு- வாக்கு பதிவு, எண்ணிக்கையில் குறைவான நபர்கள்- தலைகீழாக மாறும் தேர்தல் நடைமுறை?

புதன்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மாரடைப்பில் பால்பாஸ்கர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.

English summary
Social Activist and Dindigul Peace Trust Director Paul Baskar passed away on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X