திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, சூறாவளி காற்றுடன் திடீர் கோடை மழை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் திடீரென சூறாவாளி காற்று வீசியதுடன் மழையும் கொட்டியது.
Recommended Video
கோடை வெயில் பகலில் வெளுத்து வாங்கி வருகிறது. சில மாவட்டங்களில் சதத்தை தாண்டியும் வருகிறது வெயில். தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதாலும் வெயிலின் உக்கிரத்தாலும் சாலைகள் அனைத்தும் பகலில் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதேநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நாகை, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி, சூறாவளி காற்றுடன் திடீரென கோடை மழை பெய்தது. தொடர்ந்து இடி இடித்தபடியே மழையும் கொட்டியது.
ஓசூரில்..
ஓசூரில் நேற்று இரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று நாமகிரிப்பேட்டையிலும் மழை கொட்டியது. ராசிபுரத்தில் சாரல் மழை பெய்தது. இந்த கோடை மழை தொடர்ந்து நீடித்தால் சித்திரைப் பட்ட விதைப்புக்கு உதவியாக இருக்கும் என்பது விவசாயிகளின் கருத்து.