திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருக்குறள்- திருவள்ளுவர்- அவ்வையார்.. ரொம்ப கன்பியூஸ் ஆகிட்டாரோ? திண்டுக்கல் சீனிவாசன் புது சர்ச்சை

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: அதிமுக கட்சி கூட்டத்தில் திருக்குறளை ஒப்புவித்து எழுதியது அவ்வையார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. அத்துடன் என்னது வள்ளுவர் அதை எழுதினாரா? என மேடையிலேயே சீனிவாசன் கேட்டது அனைவரையும் அதிர்ச்சி அடையவும் வைத்தது.

Recommended Video

    நல்லார் ஒருவர் குறளை வள்ளுவர் சொன்னாரா? அவ்வையாரும் சொல்லி இருக்கிறார்-திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் எதையாவது பேசி சர்ச்சையை உருவாக்கி விடுகிறார். அண்மையில் இயேசுவை சுட்டுக் கொன்ற கோட்சேவின் வாரிசுகளா? என சீனிவாசன் பேசியது பெரும் சர்ச்சையானது.

    மீண்டும் உயிர்தெழுவார்.. இறந்த பெண் காவலரின் உடலுடன் 20 நாட்களாக பூட்டிய வீட்டில்.. திண்டுக்கல் ஷாக்மீண்டும் உயிர்தெழுவார்.. இறந்த பெண் காவலரின் உடலுடன் 20 நாட்களாக பூட்டிய வீட்டில்.. திண்டுக்கல் ஷாக்

    திருக்குறளும் அவ்வையாரும்

    திருக்குறளும் அவ்வையாரும்

    இந்த சர்ச்சையே ஓயாத நிலையில் திருக்குறளை எழுதியது அவ்வையார் என பேசியுள்ளார் சீனிவாசன். சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் வடக்குப் பகுதி அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அவ்வையாரின் குறள்

    அவ்வையாரின் குறள்

    இந்த கூட்டத்தில் சீனிவாசன் பேசுகையில், அருமையாக மழை பெய்கிறது. பெயருக்கு ஏற்றார் போல மும்மாரி மழை பெய்து நிலத்தடி நீர் பெருகுகிறது. எல்லாம் நன்றாக சிறப்பாக உள்ளது. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று அந்த காலத்தில் அவ்வையார் பாடினார்.

    என்னது வள்ளுவர் சொன்னாரா?

    என்னது வள்ளுவர் சொன்னாரா?

    அந்த காலத்தில் அரசனை நம்பி அந்த அம்மா பாடினார்கள் .. என பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் இருந்தவர் எழுந்து, நீங்க சொன்ன குறளை எழுதியது திருவள்ளுவர் என்றார். உடனே அதிர்ச்சி அடைந்தவரான சீனிவாசன், என்னது வள்ளுவர் சொன்னாரா? சரி அவ்வையாரும் சொன்னார்.. திருத்திக் கொள்ளலாம்..

    எழுதி வெச்சு படிக்கலை

    எழுதி வெச்சு படிக்கலை

    வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ரெண்டு பேரும் சொல்லியிருக்கிறாங்க.. அதனால தப்பு இல்லை.. அவ்வையாரும் சொல்லியிருக்காங்க. வரப்புயர நீர் உயரும் என அவ்வையாரும் சொல்றாங்க. நாம என்ன எழுதி வெச்சிகிட்டா பேசுகிறோம்.. கருத்துகளைத்தானே சொல்றோம்.. விஷயம் ஒன்னுதானே.. நல்ல மனசு இருந்தா மழை பெய்யும் என கூறி சமாளித்தார் சீனிவாசன்.

    English summary
    Tamilnadu Minsiter Dindigul Srinivasan' one more new controversial speech on Thirukkural.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X