தண்டவாளத்தில் பாறைகள்.. ஒட்டுனரின் சாமர்த்தியம்.. பெரும் விபத்தில் இருந்து தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்
திண்டுக்கல்; மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. தண்டவாளத்தின் நடுவே விழுந்து கிடந்த இரண்டு பெரிய கற்களை கண்ட ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது,
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே நேற்று இரவு கனமழை பெய்த நிலையில், கொடைரோடு ரயில் நிலையத்திற்கும் அம்பாத்துரை ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தின் நடுவே இரண்டு பெரிய பாறைகள் விழுந்தது..
அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் பாறைகள் கிடப்பதை பார்த்து சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.
ஓட்டுனர் மற்றும் பயணிகள் இறங்கி தண்டவாளத்தின் நடுவில் கிடந்த பாறைகளை மிகவும் சிரமப்பட்டு அப்புறப்படுத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டு சென்றது.
"வெட்டிப் பேச்சு உதவாது.." கபில் சிபலை விளாசிய ஆதிர் ரஞ்சன்.. காங்கிரஸ் உட்கட்சி மோதல் முற்றுகிறது